மதுரை, அக். 17: ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் மனோகர் அசுசு சிங்(35). இவர் மதுரை இடையபட்டியில் உள்ள இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை முகாமில் பணிபுரிந்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்ட அவர், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, நேற்று இந்தோ திபெத் பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அரசு மரியாதை செலுத்தப்பட்டு, அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவரது மரணம் குறித்து ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
எல்லை பாதுகாப்பு படை வீரர் மரணம்
previous post