தர்மபுரி: தர்மபுரி மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின், நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் தலைமை வகித்தார். மண்டல செயலாளர் தமிழ் அன்வர், மண்டல துணைச் செயலாளர் மின்னல் சக்தி, மாநில நிர்வாகிகள் கோட்டை கலைவாணன், ராமன், மன்னன், கிள்ளிவளவன், ஆதித்தமிழன், சிவஞானம், கப்பல் செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ஆட்டோ கிருஷ்ணன் வரவேற்றார். கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் மேலிடப் பொறுப்பாளர்கள் தகடூர் தமிழ்ச்செல்வன், ரத்தின நற்குமரன் ஆகியோர் கலந்து கொண்டு, கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கினர். கூட்டத்தில், வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, அவர்களுக்கான பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.