நெல்லை,அக்.15: நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் வெள்ளைசாமி மகன் முனியராஜ் (52). இவர் பாபநாசம் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள சிறிய மண்டபத்தில் பூஜை பொருட்களை வைத்து பரிகாரம் செய்துவருகிறார். இந்நிலையில் கடந்த 12ம் தேதி பரிகார பூஜைகளை முடித்துவிட்டு மண்டபத்தை பூட்டி விட்டு விகேபுரம் சென்றார். பின்னர் மறுநாள் காலையில் திரும்பி வந்துபார்த்த போது மண்டபத்தின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மண்டபத்தில் உள்ள இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பித்தளை பூஜை பொருட்கள் திருடு போயிருந்தது. இதுகுறித்து அவர் விகேபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி பூஜை பொருட்கள் திருடிய மர்ம நபரை தேடிவருகின்றனர்.