சென்னை: ஆயுதபூஜையை முன்னிட்டு 3,965 சிறப்பு பேருந்துகள் இயக்கபடும் என்று போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து 2,265 சிறப்பு பேருந்துகளும், பெங்களூரு, கோவை, திருப்பூர் ஆகிய நகரங்களில் இருந்து 1,700 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 20, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து 2,665 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 2,265 சிறப்பு பேருந்துகளும், பெங்களூரு, கோவை, திருப்பூர் ஆகிய நகரங்களில் இருந்து 1,700 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கோயம்பேடு, தாம்பரம், பூவிருந்தமல்லி பைபாஸ் ஆகிய 3 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் தாம்பரம் பேருந்து நிறுத்தத்திலிருந்து இயக்கப்படும். காஞ்சி, திருத்தணி, ஓசூர், திருப்பதிக்கு பூவிருந்தமல்லி பைபாஸ் நிறுத்தத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.