மதுரை: மதுரையில் கடந்த 17 நாட்களில் 824 உணவகங்களில் ஆய்வு செய்யப்பட்டு 211 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் 69 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 55 உணவகங்களில் 374 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டு 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.