பூந்தமல்லி:பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட 21 வார்டு பகுதிகளிலும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மழைக்காலத்திற்கு முன்பே சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார். அதன் அடிப்படையில், பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டு அம்மான் நகர் பிரதான சாலை பகுதியில் நகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.23 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த தார் சாலை அமைக்கும் பணியை நகர் மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் திடீரென நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது சாலை தரமானதாகவும், உரிய விதிமுறைகளுடன் அமைக்கப்படுகிறதா என்று அவர் சாலையை தோண்டி பார்த்து ஆய்வு செய்தார். சாலை பணியை துரிதமாகவும், தரமானதாகவும் அமைக்க வேண்டும் என்று சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.