சென்னை: அதிமுக சின்னம், கொடியை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை கோரி பழனிசாமி தொடர்ந்த வழக்கு நவ.7-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பாக பன்னீர்செல்வம் தரப்பு இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது. கட்சியிலிருந்து நீக்கிய தீர்மானம் செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு உள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் பதில் தர அவகாசம் தேவை என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்துள்ளது.