சென்னை : கலைஞர் நூற்றாண்டை ஒட்டி முரசொலி இதழில் ‘தமிழ்த்திரை உலகத்தின் பார்வையில் கலைஞர்’ என்ற தலைப்பில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்புக் கட்டுரை எழுதியுள்ளார். அந்த கட்டுரையில், “கலைஞரின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் கலைஞரை பற்றி நிறைய தகவல்களை எனக்கு கூறியுள்ளார். அவர் கூறியபோது கலைஞர் மீது இருந்த மதிப்பும் மரியாதையும் அதிகமானது. சிவாஜி, MGR, புகழின் உச்சிக்கு செல்ல முக்கிய காரணம் கலைஞர்”, என தெரிவித்துள்ளார்.