தூத்துக்குடி: தூத்துக்குடியில் மனைவி, 3 வயது மகளை கொன்றவருக்கு விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை ஐகோர்ட் கிளை உறுதி செய்துள்ளது. மனைவி, மகளை கிரைண்டர் கல்லால் அடித்து கொடூரமாக கொன்ற சங்கர் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மகளிர் நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதிசெய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு வழங்கியது.