உசிலம்பட்டி, செப். 26: தமிழ்நாடு வேளாண்மை ஆணையர் ஆணைப்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள உரக்கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிகிறது. இதன்படி உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள உரக்கடைகளில் வேளாண்துறை தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநர் சக்திகணேசன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் உடக்கிடங்கு இருப்பு மற்றும் உண்மை இருப்பு, விவசாயிகள் வாங்கிய உரங்களின் உண்மைத் தன்மை, உர பதுக்கல், விற்பனை விலை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். முறைகேட்டில் ஈடுபடும் உரக்கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.