Saturday, September 21, 2024
Home » உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு தமிழ்நாடு அரசு கூடுதல் பொறுப்பு

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு தமிழ்நாடு அரசு கூடுதல் பொறுப்பு

by Karthik Yash

புதுடெல்லி: தமிழ்நாடு அரசு தொடர்பான அனைத்து வழக்குகளையும் கையாளும் விதமாக உச்ச நீதிமன்றத்துக்கு என்று தனித்தனி வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.வழக்கறிஞர்கள் டி.குமணன் மற்றும் சபரீஷ் சுப்ரமணியன் ஆகியோருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது. தற்போது காவிரி நீர் பங்கீடு, மின்சாரம், சுற்றுச்சூழல் ஆகியவற்றை கையாண்டு வரும் வழக்கறிஞர் டி. குமணன் கூடுதல் முக்கிய பொறுப்பாக தமிழ்நாடு விஜிலன்ஸ் தொடர்பான அனைத்து வழக்குகளையும் இனிமேல் உச்ச நீதிமன்றத்தில் கையாள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, நீட் தேர்வு தொடர்பான வழக்குகளில் ஆஜராகி வந்த வழக்கறிஞர் சபரீஷ் சுப்ரமணியனுக்கு தமிழ்நாட்டின் குற்றப்பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு துறை தொடர்பான வழக்குகளை கையாள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

11 − 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi