Saturday, September 28, 2024
Home » பேஸ்புக்கில் பழகி பணம் பறித்ததுடன் இளம்பெண்ணை பலாத்காரம்: வாலிபர் சிறையில் அடைப்பு

பேஸ்புக்கில் பழகி பணம் பறித்ததுடன் இளம்பெண்ணை பலாத்காரம்: வாலிபர் சிறையில் அடைப்பு

by Neethimaan


திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே கடைக்கல் பகுதியை சேர்ந்தவர் சிபின் (35). இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கொல்லம் பரவூரை சேர்ந்த ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் ஒரு இளம்பெண்ணுடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் நெருக்கம் அதிகரித்து கடந்த 2013ம் ஆண்டு இளம்பெண்ஊருக்கு வந்திருந்தபோது சிபின் அவரது வீட்டுக்கு சென்று பெண் கேட்டுள்ளார். இளம்பெண்ணின் வீட்டினரும் சம்மதித்தனர். அதன்பிறகு அவர் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்டார்.

கடந்த 2020 மற்றும் 2022ம் ஆண்டுகளில் அவரை சிபின் ஊருக்கு வரவழைத்து பல இடங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது அவரிடம் இருந்து ரூ25 லட்சம் பணம், ரூ10 லட்சம் மதிப்புள்ள பொருட்களையும் சிபின் வாங்கியுள்ளார். ஆனால் அதன் பிறகு அவரை திருமணம் செய்யாமல் ஏமாற்றினார். இதுகுறித்து இளம்பெண் கொடுத்த புகாரின்படி, பரவூர் போலீசார் வழக்குபதிவு செய்து சிபினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

You may also like

Leave a Comment

4 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi