ஜோலார்பேட்டை : திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் வெகுமதி வழங்கி பாராட்டினார்.திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் நேற்று முன்தினம் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மேலும் இந்த கலந்தாய்வு கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்தும், காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் மனுதாரருக்கு உரிய மதிப்பளித்தல், மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுதல், போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளுதல் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்
பட்டது.
இதனைத் தொடர்ந்து கலந்தாய்வு கூட்ட இறுதியில் சிறப்பாக பணி புரிந்த மாவட்ட காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டி ஊக்குவித்தார்.மேலும் இந்த கலந்தாய்வு கூட்டத்தில் அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.