சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ கட்டமைப்புகளை தயாராக வைத்திருக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர். அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை உதவி இயக்குனர்களுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். வடகிழக்கு பருவமழை காலத்தில் தொற்று நோய், பூச்சிகளால் ஏற்படும் நோய்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு அளித்துள்ளனர்.