கொல்கத்தா: மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள கொரியர் நிறுவனத்தில் வேலை செய்து வரும் ஒருவர் பாகிஸ்தானுக்கு உளவுபார்ப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து ரகசியமாக அவரது நடவடிக்கைகளை கண்காணித்து வந்த போலீசார் நேற்று முன்தினம் அவுராவில் அவர் தங்கியிருந்த இடத்தில் இருந்து கைது செய்தனர்.
பீகாரை சேர்ந்த இவரது செல்போனில் இருந்து முக்கிய போட்டோக்கள், வீடியோக்கள் மற்றும் ஆன்லைன் சாட்டிங் உள்ளிட்டவை மூலமான ரகசிய தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றை இவர் பாகிஸ்தானில் இருக்கும் உளவுப்பிரிவுக்கு அனுப்பியதாக சந்தேகிக்கப்படுகின்றது .நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.