நாகை : முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கத்தை, நாகை மாவட்டம் திருக்குவளையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்று பல |திட்டங்களை செய்திருந்தாலும், காலை உணவு திட்டம்.எனக்கு ஒரு மனநிறைவை தருகிறது.படிப்புக்காகவும், வேலைக்காகவும், பேருந்தில் செல்லும் சகோதரிகள் கட்டணமில்லாமல் விடியல் பயணத்தை மேற்கொள்ளும்போதும், உயர்கல்வி பெறும் அரசு பள்ளி மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் 1000 பெறும்போதும், அவர்களைவிட எனக்குதான் அதிகமான மகிழ்ச்சி. மகளிர் உரிமை திட்டம் செப்டம்பர் 15ம் தேதி தொடங்க இருப்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது,”என்றார்.