பாலக்காடு: சென்னையிலிருந்து கோழிக்கூட்டிற்கு சென்ற பேருந்து கேரள மாநிலம் பாலக்காடு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சென்னையிலிருந்து நேற்று கோழிக்கோடு செல்வதற்காக தனியார் பெருந்து ஒன்று புறப்பட்டு சென்றது.
இதில் 30 பேர் பயணம் செய்த நிலையில் இன்று காலை பாலக்காடு மாவட்டம் திருவாழி என்ற இடத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென்று சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது பதிவான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
இந்தின் அடியில் 2 பேர் சிக்கி கொண்ட நிலையில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் பேருந்து தூக்கி நிறுத்தப்பட்டது. விபத்தில் படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் பாலக்காட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.