Saturday, September 21, 2024
Home » கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு வரும் அமைச்சர் உதயநிதிக்கு உற்சாக வரவேற்பு: சுந்தர் எம்எல்ஏ தலைமையில் நடக்கிறது

கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு வரும் அமைச்சர் உதயநிதிக்கு உற்சாக வரவேற்பு: சுந்தர் எம்எல்ஏ தலைமையில் நடக்கிறது

by Neethimaan

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் கலைஞரின் நூற்றாண்டு கொள்கை விழாவில் பங்கேற்க வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், கலைஞரின் நூற்றாண்டு கொள்கை திருவிழாவில் முதல் நிகழ்ச்சியாக காஞ்சிபுரம் அருகே உள்ள குருவிமலை பகுதியில் 3 மணி அளவில் 100 அடி கொடிக்கம்பத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து 4 மணி அளவில் உத்திரமேரூரில் 5 ஆயிரம் திமுக இளைஞரணி தொண்டர்கள் பங்கேற்கும் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

மாலை 5 மணி அளவில் மதுராந்தகம் நகரில் கலைஞரின் உருவ சிலை, பேனா நினைவுச் சின்னம் திறப்பு விழா நிகழ்ச்சி மற்றும் அதனைத் தொடர்ந்து மதுராந்தகம் கலைஞர் திடலில் ஆயிரம் விளையாட்டு வீரர்களுக்கு கிரிக்கெட் கிட்டுகள் மற்றும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் உள்ள 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியும் மேலும் பல்லாயிரக்கணக்கான திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்குகிறார்.

இதில், சி.கே.வி.தமிழ்ச்செல்வன், பி.எம்.பாபு, க.குமணன், கே.குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இந்நிகழ்ச்சியில், திமுக இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இதில், காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம், சி.பி.எம்.பி.எழிலரசன் எம்எல்ஏ, இளைஞரணி துணை செயலாளர் பா.அப்துல்மாலிக், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ், மாவட்ட அவைத்தலைவர் ச.இனியஅரசு, மாவட்ட துணை செயலாளர்கள் டி.வி.கோகுலக்கண்ணன், மலர்விழிகுமார், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம்,

தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.நாகன் டி.ஆர்.நாராயணன், ஆர்.டி.அரசு, எம்.எஸ்.சுகுமார், பொதுக்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், சிகாமணி, சசிகுமார், ஏழரசி சுந்தரமூர்த்தி, வெளிகாடு ஏழுமலை, எஸ்.டி.பிரேம்சந்த், எஸ்.உசேன், ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் குமார், ஞானசேகரன, சாலவாக்கம் குமார், சேகர், கண்ணன், தம்பு, சத்திய சாய், சிவக்குமார், ராமச்சந்திரன், ஏழுமலை, சரவணன், சிற்றரசு, பாபு, பகுதி செயலாளர்கள் சந்துரு, திலகர், தசரதன், வெங்கடேசன், பேரூர் செயலாளர்கள் பாரிவள்ளல், பாண்டியன், சுந்தரமூர்த்தி, எழிலரசன், மோகன்தாஸ், மாநகர நிர்வாகிகள் செங்குட்டுவன், முத்துச்செல்வன், ஜெகநாதன், நிர்மலா,

சுப்பராயன் உள்ளிட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பல்லாயிரம் தாரை தப்பட்டை மேளதாளம் நாதஸ்வரம் முழங்க வானவேடிக்கையுடன் காஞ்சிபுரம் அடுத்த குருவி மலையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ தலைமையில் திமுக இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

You may also like

Leave a Comment

three + 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi