Sunday, October 6, 2024
Home » இன்று டாஸ்மாக் கடைகள் மூடல்

இன்று டாஸ்மாக் கடைகள் மூடல்

by Ranjith

 

ஊட்டி, ஆக.15: சுதந்திர தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று தமிழ்நாடு மதுபான (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 மற்றும் தமிழ்நாடு மதுபான (சில்லறை விற்பனை) விதிகள் 1989 ஆகியவற்றின்படி எப்.எல்1 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் எவ்வித மதுபானங்களும் விற்பனை செய்யப்படமாட்டாது.

இந்த நாளில் கட்டாயமாக டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும். இந்த உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் ஏதும் திறந்திருப்பதாக பொது மக்களுக்கு தகவல் தெரியும்பட்சத்தில் அந்த விவரத்தை தொலை பேசி எண்களில் தெரிவிக்கலாம். மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்), எடப்பள்ளி, குன்னூர். (0423 2234211), கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர், ஊட்டி. (0423 2223802), உதவி ஆணையர்(ஆயம்) அலுவலகம், ஊட்டி (0423 2443693) ஆகிய எண்களுக்கு புகார் தெரவிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

four + 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi