சென்னை: ‘நீட்’ தேர்வினால் சென்னையைச் சேர்ந்த தந்தையும், மகனும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆளுநர் ரவி போன்றோருக்கு இனி மேலாவது புரியுமா? இந்த உயிர்ப் பலிகளுக்கு யார் பொறுப்பேற்பது? மனிதத்தை மதிக்காத ‘மனிதர்’களாக இப்படி மமதையுடன் பேசுவதனால் யாருக்கு என்ன பயன்?” என திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.