டொராண்டோ: கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொராண்டோ, மான்ட்ரியல் நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதி போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனயைான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா மோதினர். இதில் ஜெசிகா பெகுலா 6-2, 6-7, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தார்.
ஆடவர் ஒற்றையர் அரையிறுதியின் இத்தாலியின் ஜானிக் சின்னர் 6-4, 6-4 என அமெரிக்காவின் டாமி பாலையும், ஆஸ்திரேலியாவின அலெக்ஸ் டி மினார், 6-1, 6-3 என ஸ்பெயினின் அலெஜான்ட்ரோ டேவிடோவிச் ஃபோகினாவையும் வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தனர்.