கோரக்பூர்: உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் இருந்து லக்னோ நோக்கி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. சபேதாபாத் ரயில் நிலையம் அருகே ரயில் வந்த போது, மர்ம நபர்கள் வந்தே பாரத் ரயில் மீது கற்களை வீசி எறிந்தனர். அதனால் ரயில் பெட்டியின் கண்ணாடி உடைந்தது. தகவலறிந்த பாரபங்கி ரயில்வே போலீசார், வழக்குபதிவு செய்து கல் வீசிய நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.