சென்னை: அரசு மகளிர் விடுதி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பணியிடத்திற்கு வரும் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் பணிபுரியும் பெண்கள், மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு நியாயமான விலையில் தங்கும் விடுதிகளை நடத்தி வருகிறது. இதற்காக தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதி நிறுவனத்தையும் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பணியிடம் காலியாக உள்ளது. இந்த காலிப்பணியிடம் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.
இதற்கான விண்ணப்பம், கல்வி தகுதி, வயது உள்ளிட்ட விவரங்கள் www.tnwwhcl.in, www.tn.gov.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வரும் 17ம் தேதிக்குள், ஆர்.ஏ.புரத்தில் உள்ள தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் காலதாமதமாக, முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். தேர்வு குழுவின் முடிவு இறுதியானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.