வத்தலக்குண்டு, ஆக.4: வத்தலக்குண்டுவை சுற்றிய கிராமங்களில் தக்காளி விவசாயம் தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று கிராமப் பகுதிகளில் இருந்து அதிக அளவில் தக்காளி வத்தலக்குண்டு மார்க்கெட்டுக்கு வந்ததாலும், ஆடி 18க்கு ஏராளமானோர் வெளியூர்களில் உள்ள கோவில்களுக்கு சென்றதாலும்
முதல் நாள் ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்ற தக்காளி ஒரே நாளில் ரூ.50 குறைந்து ஒரு கிலோ ரூ70க்கு விற்பனையானது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பல நாளாக தக்காளி வாங்க முடியாத நிலையில் இருந்த ஏராளமானோர் நேற்று தக்காளி வாங்கி ஆடி 18 நல்ல நாளை சிறப்பாக கொண்டாடினர்.