சென்னை: சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் தேஜஸ் விரைவு ரயில் இனி தாம்பரம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும் என ரயில்வே துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை தாம்பரத்தில் நின்று செல்லும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தொடர்ந்து நின்று செல்லும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் தேஜஸ் விரைவு ரயில் இனி தாம்பரம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்: ரயில்வே துறை அறிவிப்பு
previous post