கிருஷ்ணகிரி அருகே பட்டாசு குடோன் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி அருகே உணவகத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் அதன் தீப்பிழம்புகள் அருகில் உள்ள பட்டாசு குடோனுக்கும் பரவியதால் பட்டாசுகளில் பற்றி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் அருகில் இருந்த மூன்று வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆகிவிட்டதாகவும் இந்த விபத்தில் இதுவரை எட்டு பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது உயிருக்கு போராடி சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து உயிர் பலி எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.