சென்னை: சென்னை ராஜாஜி சாலையில் உள்ள குண்டர் சட்ட அறிவுரை கழகத்தில் ஆஜராக வந்த கணவருக்கு கஞ்சா தர முயன்றவர் கைது செய்யப்பட்டார். போதை பொருள் வழக்கில் கைதான கணவர் சுரேஷ்குமார் ஆஜராக வந்தபோது கஞ்சா தர முயன்ற மனைவி ரேணுகாவை கையும் களவுமாக பிடித்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி பிணையில் விடுவித்தன.