திருத்துறைப்பூண்டி, ஜூலை 27: வணிகர்கள், பொதுமக்கள் சோலார் மின் சாதனங்களை பயன்படுத்த முன்வரவேண்டும் என்று நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் கூறினார்.
இந்திய அரசு புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மற்றும் புதுடெல்லி ஜி. ஐ. இசர்ட் நிறுவனத்துடன் இணைந்து திருவாரூர் திருவாரூர் நாம்கோ தொண்டு நிறுவனம் திருத்துறைப்பூண்டி நகரில் சாலையோரங்களில்மின் இணைப்பு இல்லாமல் தொழில் செய்யும் ஏழை வியாபாரிகளுக்கு சூரிய ஆற்றலைக் கொண்டு இயங்கும் மின்விளக்குகள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது.
நகராட்சி ஆணையர் பிரதான் பாபு தலைமை வகித்தார். மேலாளர் சீதாலட்சுமி, பாலம் சேவை நிறுவனச்செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சூரியசக்தி மின்சாதனங்கள் பயன்பாடு குறித்து நாம்கோ இயக்குனர் ஜீவானந்தம் எடுத்துரைத்தார்.