புதுடெல்லி: டெல்லி மருத்துவமனையில் மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய நபர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி கரோல்பக்கில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் நரம்பியல் துறை தலைவராக பொறுப்பு வகிப்பவர் மருத்துவர் சத்னம் சிங் சப்ரா. இவரிடம் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜ்குமார்(21) என்பவர் கடந்த 2021ம் ஆண்டு முதல் மனஅழுத்த நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று முன்தினம் மருத்துவ பரிசோதனைக்கு வந்த ராஜ்குமார் திடீரென்று தன் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்து அங்கிருந்த மருத்துவர் ஒருவரை தாக்கி உள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் ராஜ்குமாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.