டெல்லி: சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய கால்பந்து அணிகள் (ஆண்கள், பெண்கள்) பங்கேற்பது உறுதியானது. ஆசிய தரவரிசையில் டாப் 8-ல் இருந்தால் மட்டுமே ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க முடியும் என்ற விதிகளை தளர்த்த முடிவு செய்துள்ளதாக ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார்.