காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நாளை (27.7.2023) காலை 10 மணி முதல் 2 மணி வரை நடைபெறவுள்ளது. இதில், அனைத்து வகையிலான மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு பயனடையலாம்.
இம்முகாமில், மாற்றுத்திறனாளிகள் 18 முதல் 35 வயது வரை இருத்தல் வேண்டும். வேலைவாய்ப்பு முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள், சுய விபரக்குறிப்பு – 3 நகல்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் – 3, கல்விச்சான்றிதழ்களின் நகல்கள் – 3, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை – 3 நகல்கள் மற்றும் ஆதார் அட்டை – 3 நகல்களுடன் கலந்துக்கொள்ள வேண்டும். மேலும், விவரங்களுக்கு 94432 68192 (வாட்ஸ்அப்), 70944 91228 என்ற எண்களையும் தொடர்பு கொள்ளலாம். இந்த வேலைவாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.