ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே பைக்கில் சென்றபோது, பின்னால் வந்த லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் பகுதியை சேர்ந்தவர் நாகமுத்து (28). சென்னை மதுரவாயல் பகுதியில் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நாகமுத்து, தனது நண்பரின் பைக்கில் நேற்று முன்தினம் காஞ்சிபுரம் சென்றுவிட்டு, நேற்று சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையை நோக்கி வந்துக்கொண்டிருந்தார்.
அப்போது, பின்னால் வந்த லாரி சக்கரத்தில் சிக்கி நாகமுத்து, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார், நாகமுத்துவின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.