பழநி, ஜூலை 18: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசிற்கும், தமிழ் பண்பாட்டிற்கும் எதிராக செயல்படுவதை கண்டித்து மாநிலம் முழுவதும் பல்வேறு கட்சியினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதில் மதிமுக சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பழநியில் மதிமுக சார்பில் நேற்று கையெழுத்து இயக்கம் நடந்தது. ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகர செயலாளர் கந்தசாமி மற்றும் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.