திருப்பூர்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தலைமையில், திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2024 தொடர்பான ஆயத்த பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார். இதில், சென்னை தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு பேசியதாவது: சிறப்பு சுருக்கமாக திருத்தம் 2024 தொடர்பான ஆயத்த பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 18-19 வயது நிரம்பிய இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது, அனைத்து கல்லூரிகளிலும் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் தேர்தல் கல்வி குழு மூலமாக மாணவ, மாணவிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து மாணவ, மாணவிகளையும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.