திண்டுக்கல், ஜூலை 13: திண்டுக்கல் மதர் தெரசா லயன்ஸ் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பகுதி இணை பொருளாளர் சாமி தலைமை வகித்தார். புதிய தலைவராக பிரபாகரன்,செயலாளர்கள் சைலேந்திர ராய், மணிப்பாண்டி, பொருளாளராக கஷ்மீர் அருண் மற்றும் சங்க நிர்வாகிகள் குழு உறுப்பினர்களை, மாவட்ட முன்னாள் ஆளுநர் முத்துராமலிங்கம் பதவியேற்பு செய்து வைத்தார். புதிய உறுப்பினர்களை பொறியாளர் அறிவழகன் இணைத்து வைத்தார். சமூக ஆர்வலர் நாட்டாண்மை காஜாமைதீன் ரூ.75 ஆயிரம் மதிப்பிலான சேவை திட்டங்களை தொடங்கி வைத்து பேசினார். அமலா ஆரோக்கிய மேரி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள் வழங்கல்
previous post