திருவண்ணாமலை: திருவண்ணாமலை குடிசை மாற்று வாரியத்துக்கு சொந்தமான ரூ.4 கோடி மதிப்புள்ள 90 சென்ட் நிலம் மீட்கப்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான 90 சென்ட் நிலத்தை கடந்த 13 ஆண்டுகளாக தனியார் ஆக்கிரமித்து இருந்ததாக புகார் எழுந்தது. திருவண்ணாமலை ஆட்சியர் முருகேஷ் உத்தரவை அடுத்து 90 சென்ட் நிலம் மீட்கப்பட்டது.