மதுரை: ஆக்கிரமிப்பை அகற்றுவதில் பாரபட்சம் காட்டக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்கில் ஆட்சியர், அதிகாரிகள் நேரில் ஆஜராகினர். ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய கால அவகாசம் வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்ட விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை தொடர்பாக நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிட்டுள்ளது.