சென்னை: பிற மாநிலங்களில் எம்.பி.பி.எஸ். படித்த தமிழ்நாடு மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அரசு மற்றும் சுயநிதி கல்வி நிறுவனங்களில் இருப்பிட சான்றிதழுடன் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் முதுநிலை படிப்புகளில் சேரலாம், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு இதுவரை 39,924 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்.