மதுரை: மதுரை மாநகராட்சி வார்டுகளில் கூடுதல் பணிகளை நிறைவேற்றக் கோரி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மாநகராட்சி கமிஷனர் பிரவீன்குமாரை சந்தித்து நேற்று மனு அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வெற்றியை நோக்கி எடப்பாடி பழனிசாமி பிரசாரம் தொடங்க இருக்கிறார். வேகமாக சென்று மக்களை சந்திக்க வேண்டும் என்பதால் எடப்பாடி பழனிசாமி புதிய வாகனம் வாங்கியுள்ளார். தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். இப்போது முடிவு செய்ய முடியாது. கூட்டணி விவகாரத்தில் தமிழக மக்கள் நலன் கருதி ஜெயலலிதா போல் தைரியமான முடிவுகளை எடப்பாடி பழனிசாமி எடுப்பார். இவ்வாறு தெரிவித்தார்.