சென்னை: மதிமுக பொது செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை: மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டம், அவைத்தலைவர் ஆடிட்டர் அ.அர்ஜூனராஜ் தலைமையில் வருகிற 12ம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெறும். இதில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.