சென்னை: அமைச்சர் துரைமுருகனுடன் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, தமிழ்நாடு கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்களின் காலவரையறையற்ற வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. சங்க உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் ஒரு குழு அமைத்து ஆராய்ந்து தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டதை தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக சங்க உறுப்பினர்கள் அனைவரும் முடிவெடுத்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கல்குவாரி மற்றும் கிரஷர்களும் இயங்கும் என்று அறிவித்துள்ளனர்.