சென்னை: கூட்டணி தொடர்பாக எங்களுடன் பாஜகவினர் பேசி வருகிறார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பன்னீர்செல்வம், பழனிசாமி அரசு கவிழக்கூடிய சூழல் இருந்தது; நாம் ஆதரவு அளிக்காமல் இருந்திருந்தால் அன்றே கவிழ்ந்திருக்கும். ஜெயலலிதா விட்டுச் சென்ற ஆட்சி கவிழ்ந்துவிடக் கூடாது என்பதாலேயே ஆதரவு அளித்தோம் என்றார். செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்துவிட்டார், அதுபற்றி கேள்வி கேட்க வேண்டாம் என்றும் கூறினார்.