சென்னை: கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்கும் வகையில் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தின் கடற்பகுதிகளில் ‘சாகர் கவாச்’ ஆபரேஷன் ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது!அதில் கடலோரக் காவல் படையினரே தீவிரவாதிகள் போல் வேடமணிந்தும், அவர்களை சக கடலோரக் காவல்படை வீரர்கள் கண்டுபிடிக்கும் வகையிலும் ஒத்திகைகள் நடைபெற்று வருகின்றன. இதில் கடற்படை, கடலோர காவல்படை, மரைன் போலீசார், மத்திய தொழில் பாதுகாப்பு படை உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.