சென்னை: வண்டலூர் – ஆரம்பாக்கம் கூட்ரோட்டில் கார் மோதியதில் சிலிண்டர் வினியோகிக்கும் தொழிலாளி பாலசுப்ரமணியன் உயிரிழந்தார். இருசக்கர வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது தொடர்பாக காரை ஒட்டி வந்த மருத்துவர் சண்முகப்பிரியாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கேளம்பாக்கத்தில் மாநகர பேருந்து மோதியதில் 70 வயது மூதாட்டி உயிரிழந்தார்.