சென்னை: போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஜூலை 6ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஏஐடியுசி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர் சம்மேளனம் ஏஐடியுசியின் நிர்வாக குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூலை 6ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மண்டல அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. 14வது ஊதிய ஒப்பந்த பலன் 7 மாத நிலுவைத் தொகை உடனடியாக வழங்கிட வேண்டும். ஓட்டுனர், நடத்துனர்,தொழில்நுட்பம், அலுவலகம் ஆகிய இடங்களில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
ஜூலை 6ம் தேதி ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்
previous post