கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 18 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. கோட்டூர் அரசு மருத்துவமனையில் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் மாணவர்களை சந்தித்து, வருவாய்த் துறையினர், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.