மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் அடுத்த எலப்பாக்கம் கிராமத்தில் ராகுல்காந்தி பிறந்த நாள் விழா கட்சி கொடி ஏற்றி, பொதுக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன் அன்னதானம் வழங்கினார். காங்கிரஸ் கட்சியின் ஆராய்ச்சி துறை சார்பில், ராகுல்காந்தி பிறந்த நாள் விழா அச்சிறுப்பாக்கம் அடுத்த எலப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, கட்சியின் ஆராய்ச்சி துறை மாவட்ட தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் நாசர், விவசாய அணி மாவட்ட தலைவர் தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தார். யூனியன் சங்க தலைவர் கன்னியப்பன் அனைவரையும் வரவேற்றார்.
இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு எலப்பாக்கம் பஜார் பகுதியில் காங்கிரஸ் கட்சி கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். இதனை தொடர்ந்து, 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணைசெயலாளர் தனசேகரன், கிராம கமிட்டி நிர்வாகிகள் ஜெயக்குமார், சென்னகிருஷ்ணன், நடராஜன், தயாளன், ஆனந்து, முருகன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.