திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை 3 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு தமிழ்நாடு டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்குமாறும் டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஆளுநரின் தாய் மற்றும் குஷ்பு குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.