சென்னை: சென்னை வியாசர்பாடி ஜீவா சுரங்கப் பாதையில் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தில் உள்ளனர். போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். சாலையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர்.