கீழக்கரை, ஜூன் 19: கீழக்கரை நகர் திமுக இளைஞரணி சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் 2ம் ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. நகர் செயலாளர் பஷீர் அகமது தலைமை வகித்தார். நகர் இளைஞரணி துணை அமைப்பாளர்கள் எபென், சுபியான், அல்லா பக்ஸ், நயீம் முன்னிலை வகித்தனர். திமுக தலைமை கழக பேச்சாளர் பசும்பொன் ரவிச்சந்திரன் பேசினார்.
கீழக்கரை நகராட்சி தலைவர் செஹானஸ் ஆபிதா, மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் முஹமது ஹனீபா, தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் அப்துல் காதர், அவைத்தலைவர் ஜமால் பாரூக், நகர் துணைச் செயலாளர்கள் ஜெய்னுதீன், முனீஸ்வரன், பாண்டியம்மாள், நகர் பொருளாளர் சித்திக், மாவட்ட பிரதிநிதிகள் தவ்பீக் ராஜா, லதா கென்னடி, நகர் மாணவரணி அமைப்பாளர் இப்திகார் ஹசன், இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் கஜேந்திரன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி மரைக்காயர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நகர் இளைஞரணி துணை அமைப்பாளர் செய்யது முஹமது பயாஸ்தீன் நன்றியுரை கூறினார். மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ ஆலோசனைபடி, நகர் இளைஞரணி அமைப்பாளர் ஹமீது சுல்தான் ஏற்பாடு செய்தார்.